திருவனந்தபுரம்

ன்று கேரளாவில் ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அரசு பேருந்து அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து செம்பகமங்கலம் அருகே வந்தபோது இன்ஜின் பகுதியில் புகை வெளிவந்தது.

ஓட்டுநர் உடனடியாக இதை கவனித்து பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினார்.  திடீரென சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.  எனவே தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.