கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 9-ந்தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

காவல்துறையினர் இந்தக் கொலை தொடர்பாக தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். டாக்டர்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் இச்சம்பவத்தை காவல்துறையினர் சரியாக கையாளவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தற்போது சி.பி.ஐ, விசாரித்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்ரமும் இவ்வழக்கை கையில் எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் மேற்கு வங்காள அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இன்று கீர்த்தி சர்மா என்ற பி.காம் மாணவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளத். அந்த பதிவில்ல் இந்திரா காந்தியை போன்று மம்தா பானர்ஜியை சுட்டுக்கொலை செய்யவேண்டும் என்றும், உங்களால் அதை செய்ய முடியாவிட்டாலும், வருத்தப்படமாட்டேன்” என்றும் குறிப்பிட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்படும் பெண்களின் அடையாளத்தையோ அல்லது புகைப்படத்தையோ வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அப்பதிவு கீர்த்தி சோசியல் என்ற பெயரில் வெளியாகி இருந்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மம்தா பானர்ஜிக்கு எதிராக பதிவிட்ட மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.