கோவை

மிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தனக்கு சுகாதார அறிவுரை அளித்த தள்ளுவண்டி வர்த்தகரின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்று அதிகாலை கோவை மாவட்டத்தில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொண்டார். அவர் திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை பார்வையிட்டு, நோயாளிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக்கு முன்னர், அமைச்சர் சூலூர் பகுதியில் உள்ள பிரபலமான சாலையோர தள்ளுவண்டி கடைக்கு சென்று கூழ் குடித்தார். அவர் அப்போது பொதுமக்களுடன் இயல்பாக பேசிய அவர், கடைக்காரரிடம் கூழ் தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது தள்ளுவண்டி வர்த்தகர்,

”தினமும் காலை வேளையில் சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கூழ் குடித்து வந்தால் மூட்டு வலி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். எனவே நீங்கள் தினமும் கூழ் அருந்த வேண்டும்”

என அமைச்சருக்கும் அறிவுரை அளித்த வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.