ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை  இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக தொடர்கிறது. தமிழக மீனவர்கள்,  எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி அடிக்கடி நிகழ்கிறது, இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த சம்பவங்கள் சமீபத்திலும் (ஜனவரி 2026) தொடர்ந்து நடந்து வருகின்றன, குறிப்பாக காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இன்று  ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும், அவர்களின்  விசைபடகையும் இலங்கை கடற்படையினர்   பறிமுதல் செய்துள்ளனர்.

வழக்கம்போல நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்கள் கைது மீனவர்கள் விரட்டியடிப்பு தமிழக மீனவர்கள் தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படை

[youtube-feed feed=1]