சென்னை

தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு யில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்.

”சென்னை சென்டிரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.