சென்னை

தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சென்னை தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்று கிழமை) மதியம் 2.00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06003), மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4 -ம் தேதி (திங்கள் கிழமை) மதியம் 02.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06004), மறுநாள் காலை 5.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.