சென்னை: தங்கம் இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது சரவன் தங்கம் ரூ.97ஆயிரத்தை கடந்த நிலையில், விரைவில் ரூ.1லட்சத்தை தொட்டு விடும் என வர்த்தகர்கள் கூறி வருகின்றனர். இந்த வரலாறு காணாத விலை உயர்வு, பொதுமக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று (அக் 17) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு பறந்துசெல்கிறது. கடந்த ஆண்டு சரவன் நகை ரூ.50துஆயிரம் அளவில் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.1 லட்சத்தை நோக்கி ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
2026, அக்டோபர் 7ந்தேதேதி வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் ரூ.90,000-ஐ கடந்த நிலையில், தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. சில நாட்களில், காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து, மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 14ந்தேதிஅன்று ஒரு சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்த நிலையிலி, அடுத்தநாளான அக்டோபர் 15 (புதன்கிழமை) ரூ. 280 உயர்ந்தது. நேற்று (அக்டோபர் 16) வியாழக்கிழமை ரூ. 320 உயர்ந்த நிலையில், இன்று (அக். 17) வெள்ளிக்கிழமை அதிரடியாக சரவனுக்கு ரூ. 2,400 உயர்ந்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 12,200-க்கும் ஒரு சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதுடன், ஒருசில நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. ஒரு லட்சத்தைதாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரு கிராமுக்கு ரூ. 3 குறைந்து, ரூ. 203-க்கு விற்பனை செய்யப்படுகிறது.