டெல்லி

த்திய ரயில்வே அமைசர் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விடப்படும் என அறிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில் நாட்டில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன், புது அனுபவம் தரும் வகையில், உள்நாட்டிலேயே தயாராகி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு மக்களிடையே மிகவும் வரவேற்பு உள்ளது.

மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம்.,

”படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை கட்டமைக்கும் பணியானது நிறைவு கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 மாதங்களில், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். ரெயிலை உருவாக்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.

இதற்காக பெங்களூருவில் உள்ள ரயில் பிரிவில் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் உள்பட பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலானது, பயணிகளுக்கு, எளிய முறையில் இயங்குவதற்கான வசதிகளை வழங்கும். சர்வதேச தரநிலைகளுடனான பல்வேறு வசதிகளுடன் ரயில் வடிவமைக்கப்பட்டு வருங்காலத்தில் செயல்பாட்டிற்கு வரும்.

இந்த ரயில் கடுமையான பாதுகாப்பு தரநிலைகளுடன் ரெயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ரயிலின் உட்புறம், வெளிப்புறம், ரெயிலின் முகப்பு பகுதி, இருக்கைகள், உட்புற விளக்குகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை அழகுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில்  இந்த ரயில் வடிவமைக்கப்படுகிறது. மேலும் நீண்டதொலைவு பயணத்திற்கு ஏற்ற வகையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக இந்த ரயில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது”

என்று கூறியுள்ளார்.