காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பாக செயல்படும் முழுநேர தலைவர் தேவை’’ என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.

சிவசேனா கட்சி பத்திரிகையான ’’சாம்னா’வில் அந்த கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில்,’’ இந்திரா காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆக வேண்டும் என்பது நல்ல யோசனை தான்.. ஆனால் கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவருக்கும் அந்த திறன் இல்லையே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’’ அந்த தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதை யார் தடுத்தார்கள்?’’ என்று நையாண்டி செய்துள்ள சஞ்சய் ராவத் ‘’ ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் ஆவதை தடுப்பது அந்த கட்சியின் அழிவுக்கு வழி வகுக்கும் ‘’ என்று எச்சரித்துள்ளார்.

’’மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்படும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்று பட்டால், சக்தி மிக்க கட்சியாக உருவெடுக்கும்’’ என்றும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார்.

-பா.பாரதி.