சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள சக்தி புயலால்  மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சக்தி புயல் காரணமாக கடலில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், ராமநாதபுரம் மாவட்ட ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு அரபிக்கடலில் சக்தி என்ற பெயருடைய புயல் உருவாகியுள்ளது. இதனால் அரபிக்கடலில் அக்டோபர் 7-ம் தேதி வரை நிலைக்கொண்டு கரையினை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, திருவனந்தபுரம் முதல்,  ராமநாதபுரம் வரை,  மாவட்ட கடல் பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால்,  ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என  வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆழ்கடல் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றோர் விரைவில் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக மீனவளத்துறையும், சக்தி புயலில் கடலில் சூறாவளி காற்று காரணமாக, குமரி முதல் ராமநாதபுரம் வரையில், ஆழ்கடல் விசைப்படகு களில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வடகிழக்கு அரபிக்கடலோரம் ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடல் விசைப்படகுகளை பாதுகாப்பாக கரையில் இடைவெளி விட்டு நிறுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.