சத்தார்பூர்
மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை திறந்து இரு நாட்களில் மாயமானது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது,
கடந்த 11 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. சுமார் 1.5 அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.
நேற்று காலையில் இந்த சிலைகாணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து சென்றிருந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.
நாட்களில் சிலை திருடுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின்பேரில் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.
திறக்கப்பட்ட 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயமான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.