சென்னை: மூத்த கம்யூனிஸ்டு தலைவரான சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மூச்சுத்திணறல் காரணமாக, ஏற்கனவே தனியார் மற்றும் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றார். சுமார்   ஒன்றரை மாத காலம்  மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று, உடல்நலம் தேரியதால், கடந்த வாரம் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு  மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வயது மூப்பு காரணமாக  ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை என்று கூறப்படுகிறது. அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.