
மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது.
கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களைக் கடந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .
இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இணையத்தில் வெளியான நிலையில் படக்குழு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர். அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக SDC டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது.