புவனேஸ்வர்
கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கோடை வெயில் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இடுசா நாநுகன் போலாங்கிர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது.
வெயில் தாக்கத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது.