டெல்லி
உச்சநீதிமன்றம் வாகனத்துறையில் பலர் வேலை இழக்கலாம் எனத் தெரிவித்துள்ளது/

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், மின்சார வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறினார்.
இதற்கு நீதிபதிகள்,
”செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால், வாகனங்கள் துறையில் oஒட்டுநர்கள் போன்ற பலர் பணி இழக்கும் அபாயம் உள்ளது. அவர்களை பணியை விட்டு நீக்கக்கூடாது”
என்று கூறி உள்ளனர்.
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அவ்வப்போது எடுத்த கொள்கை முடிவுகளை தெரிவிக்குமாறு அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை மே 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[youtube-feed feed=1]