டெல்லி: உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பகுதி நேர, இரவு நேர ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.
இந் நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தொற்று பரவல் காரணமாக இனி நீதிமன்ற வழக்குகளை நீதிபதிகள் வீட்டில் இருந்த படியே காணொலி காட்சி வழியாக விசாரிப்பார்கள் என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]