டெல்லி
உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது கடந்த மார்ச் 21ம் தேதி இரவு இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கினாலும் சிபிஐ வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்., சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஏற்கனவே மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது,
[youtube-feed feed=1]