டெல்லி

ச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசில் மந்திரியாக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்வரானார்.

ஜூன் 28 ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம் தேதி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க கட்சியினரும், கூட்டணி தலைவர்களும் விரும்பினர். இதையொட்டி முதல்வராக இருந்த சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 4 ஆம் தேதி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டின் 13-வது முதல்வராக  பதவியேற்றார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்த போது நீதிபதிகள், உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால்  ஹேமந்த் சோரனின் ஜாமீன் அமலாக்கத்துறையின் விசாரணையை பாதிக்காது என தெரிவித்து உயர்நீதிமன்ற தீர்ப்பில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.