டெல்லி
பாரத இந்து முன்னணி அமைப்பின் வேல் யாத்திரையை அனுமதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
பாரத இந்து முன்ன்ணி அமைப்பு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான பிரச்சினைக்கு ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ஊர்வலம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதைஎதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பி பி. வாரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.