Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை

Jul 11, 2020
சாத்தான்குளம்:
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைமேற்கொண்டுள்ள சிபிஐ, இன்று சாத்தான்குளத்தில் உள்ள உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது.
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்தாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட தந்தை மகன், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், உயர்நிதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிசிஐடி அதிரடியாக விசாரித்து 10 காவல்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்தது. தமிழகஅரசும்,  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இதையடுத்து, வழக்கை ஏற்றுக்கொண்ட சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர்.
அவர்களிடம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, ஆவணங்களை,  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அது தொடர்பாக சிபிஐ காவல்துறையினரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர்.
இதையடுத்து நேரடி விசாரணைக்கு செல்வதாக அறிவித்த நிலையில், இன்று காலை  சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் சென்றனர். அங்கு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார். மேலும் பலரிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlZPVG1oVXRZeW9J வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா?

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu #kathirkaamam
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா? #thiruppugazh #kathirkaamam​
Load More... Subscribe

Post navigation

வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…
ஊரடங்கு காலத்தில் உதித்த யோசனை…! போலி வங்கி தொடங்கிய 3 பேர் கைது

Related Post

தமிழ் நாடு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ் நாடு

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer