மும்பை
மத்திய அமைச்சர் அமித்ஷா சத்திரபதி சிவாஜியை அவமதித்தாகா சஞய் ராவத் கூறியுள்ளார்.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வீரத்தை பாராட்டி பேசி இருந்தார்.
உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம் பி இது குறித்து
“மத்திய அமைச்சர் அமித்ஷா தனது பேச்சின்போது மாமன்னர் சத்ரபதி சிவாஜியை, சிவாஜி மகாராஜ் என்று அழைக்கவில்லை. அவரது முதல் பெயரை கூறியே அழைத்தார்.
அதேநேரம் முகலாய மன்னர் அவுரங்சீப்பின் கல்லறையை “சமாதி” என்று கூறுகிறார். இதுதான் உங்களுடைய மொழியா? இது சிவாஜி மகாராஜை அவமதிப்பதாகும்.
இதை பார்த்துக்கொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் என்ன செய்துகொண்டு இருக்கிறார். அவர் மிகவும் மதிக்கப்படும் மராட்டிய மன்னரை அவமதித்ததற்காக அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.”
என்று கூறி உள்ளார்.