புவனேஸ்வர்

டிசா ஆளுநர் மகனை கைது செய்யக் கோரி ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த 7 ஆம் தேதி ஒடிசா ஆளுநர் ரகுபர் தாசின் மகன் லலித் குமார் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கவர்னர் மகனை காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை ஆளுநர் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை

கடந்த 22ம் தேதி ஒடிசா சட்டசபை ஆளுநர் ரகுபர் தாஸ் உரையுடன் தொடங்கியபோது ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்தும், அவரது மகன் லலித் தாசை கண்டித்தும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று சட்டசபை மீண்டும் தொடங்கியபோது,ஆளுநர் மகனுக்கு எதிராக அம்மாநில முதல்வர் மோகன் மாஜி அறிக்கை வெளியிடக்கோரி எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று 3வது நாளாக சட்டசபையில் ஆளுநர் மகனை கைது செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் சுரமா பதி முதலில் சபையை காலை 11.30 மணி வரையும், பின்னர் 12 மணி வரையும் ஒத்திவைத்தார். அதற்கு பிறகும் அமளி தொடர்ந்ததாக் மாலை 4 மணி வரை சபையை ஒத்திவைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்