சென்னை: எண்ணூர் பகுதியில் உள்ள கடலில் எண்ணை கசிவுக்கு காரணமான  மத்தியஅரசின் கீர் செயல்படும் சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.73 கோடி அபராதம் விதிக்கப்பட் உள்ளதாக  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  தெரிவித்து உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  வீசிய மிக்ஜாய் புயல்  பாதிப்பு காரணமாக, சென்னை மழை வெள்ளத்தில் மிதந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மழை நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடமைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கலந்தது .

இந்த எண்ணெய் கலந்த நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானர். இதைத்தொடர்ந்து எண்ணை படலங்கள் அகறறப்பட்டன. விசாரணையில், இந்த எண்ணையானது,  அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியான தாகவும், அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக  எண்ணெய் படலம் கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது தெரிய வந்தது.

இந்த எண்ணை படலம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன்,   அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படலம் படிந்து பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும் மீன்பிடி படகுகள், வலைகள் மீது பிசின் போன்ற கரிய நிற பெட்ரோலியக்கழிவு படிந்து பாழாகின. குடியிருப்புசுவர்கள், தெருக்கள், நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது. இது சர்ச்சையை ஏற்பத்தியது.

இந்த விவகாரத்தை  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவையும் பசுமை தீர்ப்பாயம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தீர்பாயத்தின் விசாரணையின்போது,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், எண்ணை கசிவு மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில்,  ‘‘இந்த பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணை கழிவுகள்,  பல்வேறு முகமைகள் மூலமாக அகற்றப்பட்டது. அதனப்டி,    2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டருக்கு மேல் நீர் கலந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன.

அத்துடன்,  குப்பை கழிவுகள் மற்றும் மண்ணுடன் 660 டன் எண்ணெய் கழிவுகளும் அகற்றப்பட்டன என்றும்,  எண்ணெய் கசிவால் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐஐடிவல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் விசாரணைக்கு வந்தது.  இந்த அமவில்  நீதித்துறை உறுப்பினர் நீதிபதிபுஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர்  விசாரணை நடத்தினர்.  அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்சத்யஜித், ‘‘சேகரிக்கப்பட்ட எண்ணெய் கழிவுகள் அடிப்படையில், எண்ணெய் கழிவை வெளியேற்றிய சிபிசிஎல் நிறுவனம் ரூ.73 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன், சிபிசிஎல் நிறுவனத்தின்மீது,  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், ‘‘மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இழப்பீட்டு தொகை போதாது. அதைஅதிகரிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு ஜனவரிக்கு  தள்ளிவைக்கப்பட்டது