சென்னை: தமிழ்நாட்டில், 3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ3 கோடி தறிகள் தறி உபகரணங்கள் வழங்கப்படும் என்றும்,  கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு 10 % அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படுவதாகவும் சட்டப்பேரவையில்  அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு அமைச்சர் காந்தி அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் ஆர்.காந்தி துறை ரீதியிலானபல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள கைத்தறி நெசவாளா்களுக்கு உயா்ந்து வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசிக்கு ஏற்றவாறு, ஆண்டுதோறும் கூலி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளா்களின் உடலுழைப்பு மற்றும் உயா்ந்து வரும் குடும்பச் செலவுகளை ஈடுகட்ட ஏதுவாக நடப்பாண்டில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு அவா்கள் பெற்று வரும் கூலியில் 10 சதவீத அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும்.

3 ஆயிரம் நெசவாளா்களுக்கு ரூ.3 கோடியில் தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.

கைத்தறித் துணிகளின் விற்பனையை அதிகரிக்க, சென்னை தீவுத் திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சி ரூ.2 கோடி செலவிலும், கோயம்புத்தூா், சேலம், திருச்சி மற்றும் திருப்பூா் ஆகிய இடங்களில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.

2 ஆயிரம் கைத்தறி நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் தேசிய கைத்தறி வளா்ச்சி திட்டத்தின் கீழ் 10 புதிய கைத்தறி குழுமங்கள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும்.

வேலூா் மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் தேசிய கைத்தறி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் 2 சாயச் சாலைகள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வேலையில்லாத நகா்ப்புற இளைஞா்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தையல் மற்றும் ஆடை உற்பத்தி பயிற்சி வழங்கப்படும் என்றாா் அவா்.

கைத்தறித் துணிகளின் விற்பனையினை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சி ரூ.2 கோடியில் 4 மாநில அளவிலான சிறப்பு கைத்தறிக் கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.

2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய ைகத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும்.

நெசவாளர்களிடையே பிற மாநில நெசவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு பயணத் திட்டம் (Exposure Visit) ரூபாய் 50 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 500 பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Skill Development Training) வழங்கப்படும்.

ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் உள்ள சங்கங்களின் பயன்பாட்டிற்கு ரூபாய் 35 லட்சம் மதிப்பில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரம் (Quilt Stitching Machine) கரூர் சரகத்தில் நிறுவப்படும்.

நீலகிரி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு எம்பிராய்டரி மற்றும் துணி அச்சிடுதல் (Embroidery and Cloth Printing) போன்ற மதிப்பு கூட்டல் பயிற்சிகள் தேசிய வடிவமைப்பு மையம் (NID) மூலம் ரூபாய் 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

சின்னாளப்பட்டி செயற்கைப் பட்டுச் சேலைகள், கூரைநாடு சேலைகள், நாகர்கோவில் வேட்டிகள், உறையூர் சேலைகள் மற்றும் குடியாத்தம் லுங்கிகள் ஆகிய 5 பாரம்பரியமிக்க கைத்தறி இரகங்களுக்கு ரூபாய் 15 லட்சம் செலவில் புவிசார் குறியீடு (G.I.) பெறப்படும்.

ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ரூபாய் 1.50 கோடி செலவில் புதிய பல வண்ண இங்க்ஜெட் பிரிண்டிங் இயந்திரம் (Multi Colour Ink Jet Printing Machine) நிறுவப்படும்.

துறையில் பணிபுரியும் 350 அலுவலர்களுக்கு புத்தாக்கப் (Refresher Training) ரூபாய் 15 லட்சம் செலவில் வழங்கப்படும்.

ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் 84 அங்குல இரட்டை அகல மடிப்பு இயந்திரம் (Double Width Folding Machine) ரூபாய் 5 லட்சம் செலவில் நிறுவப்படும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியை (Export) அதிகரிக்க, சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய வடிவமைப்பு இரகங்கள் (New Designs) உருவாக்கப்படும்.

துணி நூல்: சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பயன்படுத்தப்படாத கட்டடங்களில் துணி நூல், நகா்ப்புற உள்ளாட்சிகள், ஆயத்த ஆடை உற்பத்தியாளா் மற்றும் ஏற்றுமதியாளா்களுடன் இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க ஆவன செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.