சென்னை: சாலை பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறை யின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ள திமுக அரசை கண்டித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த 12 நாட்களால் சாலையோரம் அமர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும்மறுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாலை பணியாளர்கள், இன்று சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை கூண்டோடு கைது செய்தனர். பல பகுதிகளில் சென்னைக்குப் போராட வந்த சாலைப் பணியாளர்களை காவல்துறையினர் ஆங்காங்கே மடக்கிய நிலையில், மொத்தம் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக க சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர், “சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம்” என முழக்கமிட்டனர். சாலைப் பராமரிப்பை ஒப்படைத்தால் சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை இழக்க நேரிடும் என கூறி சாலைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த வந்தது குறிப்பிடத்தது.