மும்பை

சாலை ஒன்றுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை மும்பை மாநகாரட்சி சூட்டி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆவார். இவர் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் மூத்த மகளான ஜான்வி கபூரும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார். து ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக்’ என பெயரிடுவதாக அறிவித்திருந்தது.

இங்கே உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். அண்மையில் இந்த பெயர் பலகைத் திறப்பு விழா நடைபெற்றபோது அதனை போனி கபூர் திறந்து வைத்து ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வணங்கினார். ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் குஷி கபூர், மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி உட்பட பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.