டெல்லி: நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னையில், 98.47 % தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இ;ej தேர்வினை மொத்தம் 39 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இதைத்தொடர்ந்து தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்சி ‘ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.65% அதிகம். அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களை விட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.12 சதவீதமும், மாணவிகள் 91.52 சதவீதமும், மாற்று பாலினத்தவர் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ +2 தேர்வு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் சென்னை மண்டலம் – 98.47 % தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்றவாது இடமாகும் . திருவனந்தபுரம் 99.91% பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. 2வது இடத்தை ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா – 99.04% பெற்று பிடித்துள்ளது. பெங்களுரு மண்டலம், பெங்களூர் – 96.95% பெற்றுள்ளது.
அனைத்துப் பாடங்களிலும் ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் – 85.12%, பெண்கள் – 91.52 % மாற்று பாலினத்தவர் – 50% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
cbseresults.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம்.