திருஅனந்தபுரம்

னமழை காரணமாக கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி நிருவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

நாடு முழுவதும் இச்ச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாகதொடரும் நிலையில் நிலையில், கனமழை காரணமாக நள்ளிரவில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து மீண்டும் இன்று அதிகாலை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றி வருகிறது.

இங்கு இதுவரை 1,300-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதால்  தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று கேரளாவில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

எனவே இன்று கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் திருச்சூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

குடியிருப்பு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும், முன்னதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.