
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர், தொடர்ந்து மூன்றுவேளை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மைதான். தூய்மைப் பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. வெயில், மழை என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மை பணியாளர்கள் பணி முக்கியமானது. நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் உங்களை நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களால்தான் சென்னை, நீர்நிலைகள் தூய்மையாக உள்ளது. காலையில் நகரம் தூய்மையாக இருக்க இரவு முழுவதும் தூய்மை பணியாளர்கள் உழைக்கிறார்கள். தன்னலம் கருதாத தூய்மைப் பணியாளர்களின் பணியை போற்றுவோம். ஊரே அடங்கி போயிருக்கும் இரவில் தூங்காமல் உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த திராவிட மாடல் ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய, . சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 200 வார்டுகளிலும் ஓய்வறைகள் கட்டப்படும். உடை மாற்றும் அறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் 300 சதுர அடியில் ஓய்வறைகள் கட்டப்படும். இந்தியாவிலேயே க்ளீன் சிட்டி தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு தூய்மை பணியாளர்கள் துணை நிற்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.

காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.186.94 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான தனியாா் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டது. காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உணவுத் திட்டம் மூலம் 31,373 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.