புதுச்சேரி
மாநில அந்தஸ்து கோரி 16 ஆம் முறையாக புதுச்சேரி சடசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று புதுச்சேரிக்கு நிர்வாக விடுதலை வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தனிநபர் தீர்மானங்களை கொண்டு வந்தனர்.
தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியது/
புதுச்சேரி நிர்வாக அதிகாரம் இல்லாமல் நிதிச்சுமையில் புதுச்சேரி சிக்கி இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார். மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என அர்சியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.