மும்பை

காராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. ங்கு ஒரே நேரத்தில் 200 மிமீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கடும் அவதியடைந்தனர்  மேலும் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த தொடர் மழையால் முத்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புனேவில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இங்கு இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மும்பை நகருக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.