சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி வரும் ஞாயிற்று கிழமை (27ந்தேதி) ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களின் வசதிக்காக நவம்பர் 1ந்தேதியும் அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.  தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை ஆகும். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை  இருப்பதால், பொதுமக்களின் வசதிக்காக, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  உணவுப்பொருள் கூட்டுறவுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  தீபாவளி பண்டிகையையொட்டி வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையை   சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.