பாட்னா

பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கடசி விலகி உள்ளது.

பீகார் மாநிலத்தின்ன் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக  முன்னாள் மத்திய அமைச்சர்,பசுபதி குமார் பாரா செயல்பட்டு வருகிறார்.  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி இடம்பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில்  பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பசுபதி குமார் நேற்று அறிவித்துள்ளார். மேலும் தலித் கட்சி என்பதால் எங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பசுபதி குற்றஞ்சாட்டி பா.ஜ.க. கூட்டணியில் விலகியுள்ளார்.

அத்துடன், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்   ராஷ்டிரிய லோக் ஜனசக்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் தெரிவித்துள்ளார்.