சென்னை: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.

நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. இதனால், மேலும் பல பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும், வந்தேபாரத் ஸ்லிப்பர் கோச் ரயில் இயக்கவும் இந்தியன் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைளை தெற்குரயில்வே மேற்கொண்ட வருகிறது. அதன் தொடர்ச்சியாக  ராமேசுவரம் ரயில் நிலை​யத்​தில் ரூ.90.20 கோடி மதிப்​பிலான மேம்​பாட்​டுப் பணி​கள் 2022 மே மாதம் முதல் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.என்​.சிங் நேரடியாக ஆய்வு செய்தார்.  பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்தித்தபோது,  ராமேசுவரம் ரயில் நிலை​யம் மேம்​படுத்​தப்​பட்ட ரயில் நிலை​ய​மாக மாற்​றப்​பட்​டு, கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. பயணி​களுக்​குத் தேவை​யான வாகன நிறுத்​து​மிடம், குளிரூட்​டப்​பட்ட ஓய்​வறை, உணவகம் உள்​ளிட்ட அனைத்து அடிப்​படை வசதி​களும் கிடைக்​கும் வகை​யில் பணி​கள் நடக்​கின்​றன. இன்​னும் ஒன்​றரை மாதத்​தில் பணி​கள் முடிவடைந்​து, மக்​கள் பயன்​பாட்​டுக்கு ரயில் நிலை​யம் கொண்டு வரப்​படும்என்றார்.

இதையடுத்து வந்தேபாரத் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  ராமேசுவரத்​திலிருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்​ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  பாம்​பன் கடலில் அமைந்​துள்ள பழைய ரயில் பாலத்​தின் மையப் பகு​தி​யில் உள்ள இரும்பு தூக்​குப் பலத்தை அகற்​றும் பணி நடந்து வரு​கிறது. தூக்​குப் பாலத்தை பாது​காப்​பான முறை​யில் அகற்​றி, அதை ராம​நாத​புரம் அருகே பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் அமைக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என்றவர்,

ராமேசுவரம்​-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு,  அதற்கான ரயில் பாதை  அமைப்​ப​தற்​கான பணி​களைத் தொடங்க மாநில அரசின் சுற்​றுச்​சூழல் அனு​மதி கிடைப்​ப​தில் சிக்​கல்​கள் உள்​ளன. அனு​மதி கிடைத்த பின்​னர் ரயில் பாதை அமைக்​கும் பணி​களைத் தொடங்​கு​வது குறித்து முடிவு செய்​யப்​படும்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

[youtube-feed feed=1]