சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்றும் மழை உண்டு என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையை புரட்டிப்போட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து, டெல்டா மாவட்டங்களில் பயிர்களை நாசமாக்கி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்ட நிலையில், பின்னர், அது காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி நேற்று இரவு கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக மழை பெய்து வந்தது.
இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முற்பகல் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.