பிரேஸ்பூர்

த்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இன்று காலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது பிரேம்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்தது. ஓட்டுநர் இதைக் கவனித்து உடனடியாக ரயிலை நிறுத்தி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் சிலிண்டரை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடிக்கடி உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது.. ஏற்கனவே கடந்த 9-ம்தேதி பிரயாக்ராஜில் இருந்து பிவானிக்கு சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ், கான்பூர் அருகே தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டரில் மோதி பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது தண்டவாளம் அருகே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இந்திய ரயில்வே கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் ரெயில்களை கவிழ்க்க 18 முயற்சிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை நடந்த 24 சம்பவங்களில் கேஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருட்கள் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.