சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4வது ரயில்பாதை அமைக்கும் பணி ஜனவரி 2026ல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பணிக்காக ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய போக்குவரத்து துறையாக ரயில் சேவை உள்ளது, ஆனால் அதிகரித்து வரும் பயணிகள் நெரிசல் காரணமாக, கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மேலும் ஒரு ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இநத் திட்டம் ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக உருவெடுக்க தொடங்கியுள்ளன. பொதுவாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்லும் பயணிகள் தாம்ரம் – செங்கல்பட்டு ரயில்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக ஏராளமான மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மூன்று வழித்தண்டவாளங்கள் மட்டுமே இந்த தடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதில் ரயில்வே துறைக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
இதை சமாளிக்காக, நான்காவது வழிப்பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்து, அது தொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில் இந்த திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்காவது ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது சென்னை புறநகர் பகுதியில் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால் கூடுதலாக 100 ரயில்களை இயக்க முடியும். சென்னை மற்றும் சென்னை புறநகர் இணைக்கக்கூடிய கூடுதல் மின்சார ரயில்களை இயக்க இந்த ரயில் பாதை பயனுள்ளதாக அமையும். இந்நிலையில், இந்த 4வது வழிப்பாதை அமைக்கும் பணி ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
[youtube-feed feed=1]