டெல்லி

ன்று ந்டைபெற இருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 18,799 பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு முடிவடைந்து முடிவுகள் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் நாளையும் (மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு (CBT 2) நடைபெற இருந்தது.  இந்த தேர்வுககாக தேர்வர்கள் இன்று காலையே தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.

தேர்வு தொடங்க சற்று நேரம் முன்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறவிருந்த தேர்வு வேறு நாளில் நடத்தப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இந்த அறிவிப்பால் தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.