லாங்கீர், ஒடிசா

பாஜக அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கூட்ட்த்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினர்

ராகுல் காந்தி தனது உரையில்,

பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத்துறையை தனியார் மயமாக்கி விடுவார்கள், இந்த நாட்டை 22 கோடீஸ்வரர்கள் ஆளுவார்கள். மேலும், இடஒதுக்கீட்டை  அடியோடு நீக்கி விடுவார்கள்.

பாஜக அரசியலமைப்புச் சட்டம்த்தை அழிக்க விரும்புகிறது, காங்கிரசும் இந்திய மக்களும் அதை நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். ஆகவே நாட்டில் மக்கள் ஆட்சி அமைய வேண்டும்.

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க காங்கிரஸ் மிகவும் பாடுபடுகிறது.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

என்று தெரிவித்துள்ளார்.