டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசின் உயர்பணிகளில் நேரடி நியமனத் திட்டத்தை கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்த எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அந்த திட்டத்தை கை விட்டது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராக்ல் காந்தி எக்ஸ் வலை தளத்தில்,

“அரசியலமைப்பு சட்டத்தையும், இடஒதுக்கீட்டு முறையையும் எப்படிப்பட்ட சூழலிலும் பாதுகாப்போம். பா.ஜ.க.வின் ‘நேரடி நியமன திட்டம்’ போன்ற அனைத்து சதிகளையும் முறியடிப்போம்.

நான் மீண்டும் சொல்கிறேன், 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உடைத்து, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்.”

என்றுபதிவிட்டுள்ளார்.