த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியான படம் ‘ஜெய் பீம்’.

இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அப்போது, ’நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கிறீர்கள், அவர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை பார்க்கிறேன்’ என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.