திருப்பதி

திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு பஞ்சாபை சேர்ந்த தொழ்லதிபர் ஒருவர் ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது.

இந்த அறக்கட்டளை உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்குவதை இந்த அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரஜீந்தர் குப்தா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த நன்கொடை காசோலையை அவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினார்.