புதுச்சேரி
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
தற்போது புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் ரங்கசாமி,
“புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்”
என்று தெரிவித்தார்.