புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்/
இன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்து வரும் பட்ஜெட் தொடர் கூட்டத்தின் 10வது நாள் கூட்டம் தொடங்கியது. முதலில் சட்டசபை உறுப்பினர்களின் கேள்ளி நேரம் தொடங்கியபோது குறிக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரியின் தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து இது சம்பந்தமாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் இதே கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினர்களும் திமுக உறுப்பினர்களும் முன்வைத்தனர். சபாநாயகர் கேள்வி தொடர் முடிந்த பின்னர் இது குறித்து விவாதிக்கலாம் என அறிவுறுத்ய போதிலும் அவையில் கூச்சல் எழுப்பி சபாநாயகர் முன்பு தொடர்ச்சியாக இதனை வழியுறுத்தி வந்தனர். எனவே சபாநாயகர் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் செல்வத்தை உடனடியாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார்.
சபாநாயகர் உத்தரவுப்படி அவைக் காவலர்கள் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதைக் கண்டித்த திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.