சென்னை: சென்னையில்,  ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல்  செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு ஒரு முறையும், அடுத்ததாக, அக்டோபர் முதல் மார்ச்  என அடுத்த 6 மாதம் என 2வது முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில்,   ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வரும் செப்.30-க்குள் நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டுக்கு வரி செலுத்துவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த 2024-2025-இல் ரூ.2,023 கோடி வசூலிக்கப்பட்டது.  கடந்த செப்டம்பர் 20ம் தேதி வரை 900கோடி வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் 75% இணையம் மூலம் வரி செலுத்தி இருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது 13.50 லட்சம் கட்டடங்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். என்ற நிலையில், சுமாா் 8 லட்சம் கட்டடங்களுக்கு வரி வசூலிக்கப்படுவதாகவும், நடப்பு வருவாய் ஆண்டில் ரூ.2300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டமிடப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.