சென்னை: தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க  அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை மனு அளித்துஉள்ளது.

பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன்  சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைசந்தித்து இதுதொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

இதைத்தொடர்ந்து அளுநர் மாளிகை வாசல் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வத்தாமன்,   அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்ஒரு வரி விடுபட்டது சர்ச்சையாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்திருந்தார்.  அதுபோல ஏடற்கனவே  உதயநிதி,  நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என்றும்,  சனாதனத்தை வேரறுப்போம் என்றும் பேசியிருக்கிறார்.

அரசு பதவியில் உள்ளவர்கள்,  இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது  கண்டிக்கத்தக்கது. அவர்களின் பேச்சுக்கள் குற்றவியல் நடவடிக்கைக்கு உரியது. அதனால்,  , இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட ஆளுநர்,  இதுதொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதல்வரும், துணை முதல்வரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கை கள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.  இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை என காட்டமாக விமர்சித்தார்.