யநாடு

நாளை மறுநாள் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். இவற்றில் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

காலியாக இருன்ந்த வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது.  மேலும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்

நாளை மறுநாள் ( புதன்கிழமை) பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளாதால் அவ்ர். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் வயநாடு வருகை தர உள்ளார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக இருவரும் பிரசாரம் செய்யலாம் என்றாலும் அவர்கள், எத்தனை நாட்கள் பிரசாரம் செய்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை.