சென்னை: சென்னை கிண்டியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது.

நவ. 21 அன்று சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அனைத்து மாவட்ட வேலைவாய் ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மய்யத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்
.காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்படும் முகாமில், 8, 10, 12ஆம் வகுப்பு, அய்டிஅய், டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் டிகிரி ஆகிய கல்வித் தகுதிகளை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.