டில்லி:

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு  நீட்டிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட சேவைகள், தகவல் சேவை உள்ளிட 12 துறைகளை (சேம்பியன் சேவை துறைகள்) தேர்ந்தெடுத்து அவற்றின் மீது கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்துவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துதது.

இதற்கு உதவுவதற்காக ரூ.5 ஆயிரம் கோடியில் ஒரு நிதியம் உருவாக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மத்திய குறு சிறு மற்றும் மத்தியதர நிறுவனங்கள் துறை அமைச்சகம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தை 2008–09 ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தை 2017–18, 2018–19, 2019–20 என மூன்று நிதி ஆண்டுகளுக்கு நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டம் காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது மானியத்துடனான கடன் திட்டம் ஆகும்.

3 வருட காலம் இந்த திட்டத்தை நீட்டிப்பதற்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் 3 ஆண்டுகளில் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்வதற்கு ‘நபெட்’ அமைப்புக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 500 கோடி கேரண்டி (உத்தரவாதம்) அளித்து வந்தது.

இந்த உத்தரவாதத்தை ரூ.19 ஆயிரம் கோடி என்ற அளவில் (இரு மடங்கு) உயர்த்துவதற்கும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு தனது ஒப்புதலை அளித்துள்ளது.

[youtube-feed feed=1]