சென்னை: காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக சென்னையில்,   அரசின் பசுமை பண்ணை கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக காய்கறிகள்,, பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, காய்கறிகள் அழுகி விடுவதால்  அதன் விலை உயர்ந்துள்ளது. காலநிலை காரணமாக தக்காளி விளைச்சலில் பெறும் மாற்றம் இருந்தது. தக்காளி காய்கள் பழுக்காமல் செடியிலேயே வெம்பி விட்டதால், காய்கறி சந்தைகளுக்கு வரத்து வெகுவாக குறைந்தது.. இதனால் சாமானிய  மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே அனைத்து வகையான வரிகளையும் உயர்த்தி அரசு பொதுமக்களை தள்ளாட வைத்துள்ள நிலையில், சமீப காலமாக உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில்  காய்கறிகள் மற்றும்  வரத்து குறைந்ததால்  அதன் விற்பனை கடுமையாக உயர்ந்த வருகிறது. மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும் சில்லரை விற்பனையில் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெங்காயம் மொத்த விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மேலும், பீன்ஸ்  உள்பட அனைத்து வகையான காய்கறிகளம் கிலோ ரூ.100 எட்டி உள்ளது. இதனால்,  பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்பனை தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி மறறும் இதர காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

இதற்காக நாசிக்கி

ல் இருந்து வந்த வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ ரூ.49-க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.